கால்பந்து

மைதானத்தில் இருந்து தவறி விழுந்த கால்பந்து ரசிகர் பலி.. போட்டி நிறுத்தம்

Published On 2023-06-04 11:49 GMT   |   Update On 2023-06-04 11:49 GMT
  • தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • ரசிகர் இறந்ததையடுத்து கால்பந்து கிளப் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

அர்ஜென்டினாவில் நேற்று ரிவர் பிளேட், டெப்சேனா ஒய் ஜஸ்டிகா அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்சில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த 53 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர், கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர். ஆனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் காரணமாக, முதலில் மருத்துவ எமர்ஜென்சி என கூறி போட்டி 14 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் ரசிகர் இறந்தது தொடர்பாக நடுவர் அறிவித்ததும், போட்டி மேலும் 27 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

மேலும் ஒருநாள் முழுவதும்  துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், மைதானம் 24 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News