உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜி குணமடைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2023-06-22 13:26 IST   |   Update On 2023-06-22 13:45:00 IST
  • அமைச்சர் செந்தில்பாலாஜி குணமடைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
  • குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது

குளித்தலை,

கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து. விரைவில் அவர் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றிட வர வேண்டி குளித்தலை அருகே உள்ள ஸ்ரீ மலையாள சுவாமி கோவிலில் குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது, இதில் குளித்தலை ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், பழனி கராத்தே செந்தில், குமார், மேட்டு மருதூர் தனசேகரன், பாஸ்கர், கந்தசாமி, மருதூர் சந்திரசேகர், ராஜேந்திரம் கோபால், கூடலூர் மயில்வாகனன் மற்றும் குளித்தலை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News