இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 மார்ச் 2025
- சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம்.
- திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-25 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: தசமி காலை 11.24 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 2.50 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கருட வாகனத்தில் உலா. காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம். குடந்தை ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கைலாச வாகனத்திலும் அம்பாள் ஏக சிம்மாசனத்திலும் பவனி. குலசேகர ஆழ்வார் திருநட்சத்திர வைபவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீகாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-நலம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-அமைதி
சிம்மம்-பாசம்
கன்னி-பண்பு
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- உயர்வு
மகரம்-சுகம்
கும்பம்-கவனம்
மீனம்-சுபம்