இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-22 ஏப்ரல் 2025
- சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி சந்நிதியில் நான்கு கருட சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-9 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி நண்பகல் 1.37 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: திருவோணம் காைல 8.26 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி சந்நிதியில் நான்கு கருட சேவை. சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி. செம்பொனார் கோவில் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் திருவீதியுலா. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-செலவு
மிதுனம்-போட்டி
கடகம்-நலம்
சிம்மம்-வெற்றி
கன்னி-அன்பு
துலாம்- நட்பு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- நிறைவு
மகரம்-நன்மை
கும்பம்-சுகம்
மீனம்-ஆர்வம்