வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஜனவரி 2025

Published On 2025-01-20 07:00 IST   |   Update On 2025-01-20 07:00:00 IST
  • மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.
  • கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-7 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சஷ்டி காலை 10.35 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.07 மணி வரை பிறகு சித்திரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் உற்சவம் ஆரம்பம். சிம்மாசனததில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர சூசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-சுபம்

மிதுனம்-புகழ்

கடகம்-நட்பு

சிம்மம்-அன்பு

கன்னி-சாந்தம்

துலாம்- வெற்றி

விருச்சிகம்-வரவு

தனுசு- உயர்வு

மகரம்-போட்டி

கும்பம்-திறமை

மீனம்-நன்மை

Tags:    

Similar News