இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 மே 2025
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-15 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை பின்னிரவு 3.28 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.37 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு. சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகுரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத் துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-ஆர்வம்
கடகம்-கவனம்
சிம்மம்-சுகம்
கன்னி-தாமதம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-நலம்
தனுசு- நன்மை
மகரம்-உயர்வு
கும்பம்-உழைப்பு
மீனம்-மாற்றம்