வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 ஜூலை 2025

Published On 2025-07-29 07:45 IST   |   Update On 2025-07-29 07:45:00 IST
  • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
  • ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-13 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி பின்னிரவு 2.29 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : உத்திரம் இரவு 9.47 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நயினார்கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகி சுபசுக்காட்சி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உதவி

ரிஷபம்-பக்தி

மிதுனம்-உயர்வு

கடகம்-ஆசை

சிம்மம்-இன்பம்

கன்னி-உவகை

துலாம்- ஈகை

விருச்சிகம்-நிறைவு

தனுசு- கடமை

மகரம்-களிப்பு

கும்பம்-மேன்மை

மீனம்-முயற்சி

Tags:    

Similar News