வழிபாடு

திருப்பதி கோவிலில் 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

Published On 2022-12-26 08:44 GMT   |   Update On 2022-12-26 08:44 GMT
  • ஜனவரி 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
  • நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால், 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

எனவே இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News