வழிபாடு

சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடிய பின்னர் கோவிலுக்கு வந்தபோது எடுத்த படம்.

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீர்த்தவாரி

Published On 2023-07-18 03:44 GMT   |   Update On 2023-07-18 03:44 GMT
  • சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • மற்ற கால பூஜைகள் நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் நடந்தது.

இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினம் வருகிறது. நேற்று முதல் அமாவாசை என்பதால் சிலர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News