வழிபாடு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் திருமஞ்சன உற்சவம்
- நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
மாமல்லபுரம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத உத்திர திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து நடராஜருக்கு அபிஷேகமும், பின்னர் வளாகத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.