வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2024-03-24 05:10 GMT   |   Update On 2024-03-24 05:31 GMT
  • காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
  • இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வருகிறார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வரு கின்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்கின்றனர். இரவு 9 மணிக்கு மேல் கோவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வம் தெரியாத வர்கள் முருகப்பெருமானை தரிசி த்தால் தங்கள் குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான நாலு மூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர விழா நடக்கிறது. உத்திரத்தை முன்னிட்டு இன்று குன்றுமலை சாஸ்தா கோவிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், மின்வசதி, உள்பட அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News