வழிபாடு

இன்று இரண்டாவது நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

Published On 2022-09-27 06:32 GMT   |   Update On 2022-09-27 06:32 GMT
  • ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

ஓம் அகர முதல்வா போற்றி!

ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

ஓம் உமையவள் மைந்தா போற்றி!

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

ஓம் ஐங்கரனே போற்றி!

ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

ஓம் கற்பக களிறே போற்றி!

ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

இன்று இரண்டாவது நாள் போற்றி போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

ஓம் வளம் நல்குவாய் போற்றி

ஓம் நலந்தரும் நாயகி போற்றி

ஓம் முக்கண் மூர்த்தியேபோற்றி

ஓம் அறத்தின் வடிவோய்போற்றி

ஓம் மின் ஒளி அம்மா போற்றி

ஓம் எரி சுடராய் நின்ற தேவிபோற்றி

ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

ஓம் எரம்பன் தாயானவளேபோற்றி

ஓம் எங்களின் தெய்வமேபோற்றி

ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனேபோற்றி

ஓம் ஈரேழுலகில் இருப்பாய்போற்றி

ஓம் சூளா மணியே போற்றி

ஓம் சுந்தர வடிவே போற்றி

ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

ஓம் நட்புக்கரசியே போற்றி

ஓம் திரிமூர்த்தி தேவியேபோற்றி!

Tags:    

Similar News