வழிபாடு

நாராயணவனம் பராசரேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவம் 19-ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-06-15 14:01 IST   |   Update On 2023-06-15 14:01:00 IST
  • பிரம்மோற்சவ விழா 28-ந் தேதி வரை விழா நடக்கிறது.
  • 25-ந் தேதி ரதோத்சவம் நடக்கிறது.

நாராயணவனம் சம்பகவல்லி உடனுறை பராசரேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 28-ந் தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான 19-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்றமும், மாலையில் சந்திரபிரபை வாகனசேவையும் நடக்கிறது.

தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சுவாமி, தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை வாகன சேவைகளில் சுவாமி தரிசனம் கொடுக்கிறார்.

20-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந் தேதி ஹம்ச வாகனத்திலும், 22-ந் தேதி சேஷ வாகனத்திலும், 23-ந் தேதி நந்தி வாகனத்திலும், 24-ந் தேதி கஜ வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

25-ந் தேதி ரதோத்சவம் நடக்கிறது. 26-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி, தாயாருக்கு கல்யாண உற்சவமும், தொடர்ந்து அஸ்வ வாகனசேவையும் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடராஜசுவாமி உற்சவமும், மாலையில் ராவணேஸ்வர வாகனசேவையும் நடக்கிறது.

28-ந் தேதி காலை 11 மணிக்கு திரிசூலஸ்நானமும், மாலையில் கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.

பிரமோற்சவத்தையொட்டி 26-ந் தேதி நடைபெறும் ஆர்ஜித கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் (இருவர்) ரூ.500 செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கை, ஒரு லட்டு, ஒரு அப்பம், அன்னபிரசாதம் ஆகியவை வழங்கப்படும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News