வழிபாடு
null

விரதங்களும்... அதன் பலன்களும்...

Published On 2023-11-03 10:26 IST   |   Update On 2023-11-03 13:47:00 IST
  • பிரதோஷ விரதம் இருந்தால் மன அமைதி கிடைத்திடும்.
  • அமாவாசை விரதம் இருந்தால் பித்ருக்களின் ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.

* விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.

* வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.

* சஷ்டி விரதம் இருந்தால் மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.

* கவுரி விரதம் இருந்தால் குறையாத செல்வமும் நீண்ட ஆயுளும் குழந்தைகளும் கிடைக்கும்.

* வரலட்சுமி விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும், திருமண உறவில் எந்த விரிசலும் இருக்காது.

* பிரதோஷ விரதம் இருந்தால் மன அமைதி கிடைத்திடும், நீண்ட ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.

* மகா சிவராத்திரி விரதம் இருந்தால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

* வைகாசி விசாக விரதம் இருந்தால் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

* நவராத்திரி விரதம் இருந்தால் மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

* கோகுலாஷ்டமி விரதம் இருந்தால், மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

* அமாவாசை விரதம் இருந்தால் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.

* பவுர்ணமி விரதம் இருந்தால் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

* கார்த்திகை விரதம் இருந்தால் எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

Tags:    

Similar News