திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலம்
- வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மகா தீபாராதனையும், மாலை 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடைபெறுகிறது. இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெறுகிறது.