- காவிரியில் நீராடலுக்கு முடவன் முழுக்கு என்று பெயர்.
- காவிரி நதி ஓடும் எந்த ஊரிலாவது நீராடினால் லன் கிடைக்கும்.
ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் புனித நீராட விரும்பினான். இதற்காக அவன் தொலைவில் இருந்து மெல்ல, மெல்ல மயிலாடுதுறைக்கு நடந்து வந்தான். அவன் வருவதற்குள் ஐப்பசி 30 நாளும் முடிந்து விட்டது. கடைசி நாளான கடை முழுக்கும் முடிந்து விட்டது. இதனால் அவன் மிகவும் வருந்தினான். மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீமயூரநாதரிடம் மனமுருகி வேண்டினான். அவனது பிரார்த்தனைக்கு ஈசன் மனமிரங்கி வழிகாட்டினார்.
சிவபெருமான் கூறுகையில், " ஐப்பசி 30 நாட்களும் முடிந்தாலும் கவலை வேண்டாம். கார்த்திகை முதல் தேதி நீ காவிரியில் புனித நீராடு. அதனால் உனக்கு ஐப்பசி மாத புனித நீராடலுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் முழுமையான அளவில் கிடைக்கும்" என்று கூறினார். மேலும் கார்த்திகை 1-ந்தேதி காவிரியில் யார் புனித நீராடினாலும் அவர்களுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் நீராடிய பலன் உண்டு என்று கூறி மறைந்தார். ஆகவே நாளை (வெள்ளிக்கிழமை) காவிரியில் நீராடலுக்கு முடவன் முழுக்கு என்று பெயர். முடவன் முழுக்கு அன்று காவிரி நதி ஓடும் எந்த ஊரிலாவது நீராடினால் ஐப்பசி 30 நாளும் நீராடிய பலன் கிடைக்கும்.