- திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி நடக்கிறது.
- 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி காலை 9.45 மணிக்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் ெதாடங்குகிறது.
இதை தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் கள்ளழகர் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் பல்லக்கில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.பின்னர் இரவு 7.30 மணிக்கு சுவாமி இருப்பிடம் செல்கிறார்.தொடர்ந்து 3-ந்தேதியும், 4-ந்தேதியும் அதே நிகழ்ச்சிகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிகளை மணக்கிறார்.
திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.