வழிபாடு
மேல்மலையனூர் கோவில்

மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்: 25 மாதங்களுக்கு பிறகு நாளை நடக்கிறது

Published On 2022-03-30 05:18 GMT   |   Update On 2022-03-30 07:44 GMT
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 25 மாதங்களுக்குப் பிறகு வெளியில் உள்ள ஊஞ்சலில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மாசிப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்தநிலையில் மாதந்தோறும் அமாவாசை விழா அன்று இரவு வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) அமாவாசை அன்று வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் நடைபெற உள்ளது. 25 மாதங்களுக்குப் பிறகு வெளியில் உள்ள ஊஞ்சலில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News