ஆன்மிகம்
ஐயப்பன் கோவில் அடிக்கல் நாட்டு விழா
முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டுவிழாவில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். தலைமை குருநாதர் முதுகுளத்தூர் பாலகுருசாமி, குருநாதர் திருமாறன், ஜி.எம். மகால் தாமோதரன், சோனை மீனாள் கலைக் கல்லூரி தலைவர் அசோக்குமார், தாளாளர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாஸ்தா ஐயப்ப குழு தலைவர் குருசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முனிய சாமி, இணைப்பொருளாளர் ராமர் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், முதுகுளத்தூர் ஐயப்பன் குழு நிர்வாகிகள் வழி விட்டான், காத்தகுளம் மலைச்சாமி, பாஸ்கரன் மணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை முதுகுளத்தூர் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு செய்திருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.
சாஸ்தா ஐயப்ப குழு தலைவர் குருசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முனிய சாமி, இணைப்பொருளாளர் ராமர் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், முதுகுளத்தூர் ஐயப்பன் குழு நிர்வாகிகள் வழி விட்டான், காத்தகுளம் மலைச்சாமி, பாஸ்கரன் மணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை முதுகுளத்தூர் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு செய்திருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.