ஆன்மிகம்
புஷ்பவனேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

புஷ்பவனேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

Published On 2021-11-24 05:39 GMT   |   Update On 2021-11-24 05:39 GMT
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது.
திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. யாக பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News