ஆன்மிகம்
தாமரை வடிவில் உருவாக்கப்பட்ட மண்டபத்தில் ஸ்நாபன திருமஞ்சனம்

தாமரை வடிவில் உருவாக்கப்பட்ட மண்டபத்தில் ஸ்நாபன திருமஞ்சனம்

Published On 2021-10-11 10:40 IST   |   Update On 2021-10-11 10:40:00 IST
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை 2 மணிநேரம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது ஜாதிபத்திரி, பிஸ்தா, உலர்ந்த பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, ரோஜா மலர்கள், தாமரை மலர்கள் உள்பட பல வண்ணமலர்கள், கொய் மலர்கள், நீல நிறத்திலான புனித மாலைகள், வெட்டி வேர், துளசி, பன்னீர் இலை, ஆஸ்திரேலிய பப்பாளி, திராட்சை கொத்துகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகளை உற்சவர்களுக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பிரத்யேக கிரீடங்களும் அணிவிக்கப்பட்டன.

மேலும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்த ரெங்கநாயக்கர் மண்டபத்தில் 20 திறமையான கைவினைஞர்கள் 3 நாட்களாக வேலை செய்து தாமரை வடிவிலான மண்டபத்தை உருவாக்கினர்.

Similar News