ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மூன்று கால அபிஷேகத்துக்கு பிறகு மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 16-ந்தேதியில் இருந்து வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று காலை யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, மகா ஆரத்தி நடந்தது. கோவிலில் மூன்று கால அபிஷேகத்துக்கு பிறகு மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
மேலும் துணைச் சன்னதிகள், நான்கு கோபுரங்கள், ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபம், பாதாள விநாயகர், செங்கல்வராயசாமி உள்பட அனைத்துச் சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. அதன் பிறகு நைவேத்தியம், மகா தீபாராதனை நடந்தது.
பவித்ரோற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு குடும்பத்தினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் துணைச் சன்னதிகள், நான்கு கோபுரங்கள், ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபம், பாதாள விநாயகர், செங்கல்வராயசாமி உள்பட அனைத்துச் சன்னதிகளில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. அதன் பிறகு நைவேத்தியம், மகா தீபாராதனை நடந்தது.
பவித்ரோற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு குடும்பத்தினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.