ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பவித்ரோற்சவம் 4-வது நாள்: பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவ விழா 4-வது நாளில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, மகா ஆரத்தி நடந்தது.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் ஊர்வலமாக வந்து விநாயகர், செங்கல்வராயர், மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் நைவேத்தியம், மகாதீபாராதனை, மந்த்ர புஷ்பம் நடந்தது. உற்சவத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் ஊர்வலமாக வந்து விநாயகர், செங்கல்வராயர், மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் நைவேத்தியம், மகாதீபாராதனை, மந்த்ர புஷ்பம் நடந்தது. உற்சவத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.