ஆன்மிகம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாளை கடலூர் கடற்கரையில் தர்பணம் கொடுக்க தடை
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
ஆனால் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு, விருத்தாசலம் மணிமுக்தாறு என்று மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
ஆனால் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு, விருத்தாசலம் மணிமுக்தாறு என்று மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.