ஆன்மிகம்

சுக்ரீவனுக்கு உதவிய ராமர்

Published On 2019-04-30 09:16 GMT   |   Update On 2019-04-30 09:16 GMT
சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்ட ராமர் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
கிஷ்கிந்தையை ஆட்சி செய்து வந்த வானர அரசன் வாலியின் சகோதரன் சுக்ரீவன். ஒருமுறை வாலி, அசுரன் துன்துபி என்பவனோடு சண்டையிட்டான். ஒரு குகைக்குள் சென்ற அந்த அசுரனை பின் தொடர்ந்து சென்றான் வாலி. அப்போது வெளியே தம்பி சுக்ரீவனை காவலுக்கு வைத்தான். நீண்ட நாள் ஆகியும் வாலி வெளியில் வரவில்லை.

அதனால் அண்ணன் இறந்து விட்டதாக கருதி, பெரிய பாறையால் அந்த குகையை மூடிவிட்டு அரண்மனை திரும்பினான் சுக்ரீவன். பின்னர் அரசனாக பதவி ஏற்று நாட்டை ஆட்சி செய்து வந்தான். இந்த நிலையில் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த வாலி, தன் தம்பி அரசாட்சி செய்வதை அறிந்து, அவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக கருதி, நாட்டை விட்டே துரத்தி விட்டான். அதோடு சுக்ரீவனின் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொண்டான்.

பின்னாளில் சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக வாலியை அழிக்க சுக்ரீவன் எண்ணினான். அதன்படியே வாலியை சண்டைக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம், ராமன் கூறினார். இருவரும் வெட்ட வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த ராமர், வாலியின் மீது அம்பு விட்டு அவனை கொன்றார். அதன்பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் நன்றிக் கடனாக தன்னுடைய சேனைகளை ராமனுக்குக் கொடுத்து ராவண யுத்தத்திற்கு துணை நின்றான்.
Tags:    

Similar News