ஆன்மிகம்

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2019-02-28 08:54 GMT   |   Update On 2019-02-28 08:54 GMT
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜை யுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், யாகசாலை பூஜையில் கணபதி, திருஷ்டி துர்கா சூலினி, துர்கா ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

நிகழ்ச்சியில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, செயலாளர் சுப்பையா, தலைமை ஆசிரியை கல்பனஸ்ரீனிவாசன், மகேந்திரா, தொழிலாதிபர் அமுதா ஜெய்சங்கர், கோமதி பாலமுருகன், பிரேமா முருகன் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை தேவகி ரவி நாராயணன், சீதா எட்டப்பன், லதா மூனிஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News