ஆன்மிகம்

திருமணச் சடங்கில் கருடன்

Published On 2018-10-06 09:02 GMT   |   Update On 2018-10-06 09:02 GMT
ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர்.

இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம். வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம் ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.

மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல் யம் என்னும் தாலியைச் செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும். அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.
Tags:    

Similar News