ஆன்மிகம்

ராமர் வனவாசம் செல்லக் காரணம்

Published On 2018-10-03 08:22 GMT   |   Update On 2018-10-03 08:22 GMT
ராமர் வனவாசம் செல்ல பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். ஜாதக ரீதியாக முக்கியமாக காரணமாக சொல்லப்படுவது எது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 8, 4, 6, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது நடந்தது என்ன என்று இந்த பாடல் சொல்லுகிறது.

‘ஜென்ம ராமர் வனத்திலே
சீதையைச் சிறை வைத்ததும்,
தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்,
இன்மை எட்டினில் வாலி
பட்டமிழந்து போம் படியானதும்,
ஈசனார் ஒரு பத்திலே
தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்,
சத்திய மாமுனி ஆறிலே
இரு காலிலே தளை
பூண்டதும்,
வன்மை யற்றிட ராவணம் முடி
பனிரெண்டினில் வீழ்ந்ததும்.
மன்னு மா குரு சாரி
மாமனை வாழ்விலா
துறமென்பவே!’

இந்தப் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது: ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கிறது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம் என்பர். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கலாம். ஆதிபத்தியம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். 
Tags:    

Similar News