ஆன்மிகம்

நாளை ஆடிப்பெருக்கு...

Published On 2018-08-02 09:53 GMT   |   Update On 2018-08-02 09:53 GMT
காவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
காவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

குடகு மலையில் உற்பத்தி ஆகிற காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல் துவங்கி பூம்புகார் வரை பாய்கிறது. மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என்று காவிரி கடலில் கலக்கிற பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு களை கட்டும்.

நமது கலாசாரத்தில் நதிகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் காவிரி வளம் பெருக்கும் பகுதிகளில் சோழ தேசத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

கரிகாற்சோழ மன்னன் காலத்தில் இந்த ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டு நீரானது வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கும்.

காவிரிக்கு ‘தட்சிண கங்கை’ என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்’ என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.
Tags:    

Similar News