ஆன்மிகம்

விராலிமலையில் அமைந்துள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரம கும்பாபிஷேகம் 4-ந்தேதி நடக்கிறது

Published On 2016-09-01 11:25 IST   |   Update On 2016-09-01 11:25:00 IST
விராலிமலையில் அமைந்துள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரமத்தில் வருகிற 4-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தை திடலில் உள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரம அமைந்துள்ளது. இங்கு வருகிற 4-ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று காலை (1-ந்தேதி, வியாழக் கிழமை) காலை 7.30 மணிக்கு புனித தீர்த்தம் எடுத்து கிரிவலம் வருதல், காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 10 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

நாளை (2-ந்தேதி) மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதற்கால ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், 3-ந்தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை ஆரம்பம், வேத பாராயணம், விமான கலசம் வைத்தல், பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை ஆரம்பம் வேதபாராயணம் நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை, நான்காம் கால யாகசாலை ஆரம்பம், 6 மணிக்கு ஸ்பர்சா ஹூதி, 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, காலை 7. 30 மணிக்கு பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 8.20 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை, 10 மணிக்கு மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்.

பின்னர் மாலை 6.30 மணிக்கு சத்ருசம்கார மூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரம நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Similar News