ஆன்மிகம்

பூம்புகார் பத்தினி கோட்டத்தில் கண்ணகிக்கு சிறப்பு வழிபாடு பக்தர்கள் தரிசனம்

Published On 2016-08-13 14:18 IST   |   Update On 2016-08-13 14:18:00 IST
பூம்புகார் பத்தினிக்கோட்டத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பூம்புகார் பத்தினிக்கோட்டத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

‘கற்புக்கரசி‘ என தமிழர்களால் போற்றப்படுபவர் கண்ணகி ஆவார். இவர் கற்புக்கரசி, பெண்மையின் தெய்வம் எனவும் தமிழர்களால் போற்றப்படுகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்டு விளங்கும் கண்ணகி, நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பூம்புகார் மேலையூரில் அவர் வாழ்ந்த பகுதியில் பத்தினிக்கோட்டம் என்ற பெயரில் கண்ணகிக்கு தனி கோவில் உள்ளது. இங்கு கண்ணகி, ஆடி மாதம் அனு‌ஷம் நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி வைகுந்தம் சென்ற நாளை கண்ணகி வீடுபேறு அடைந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டி வருகின்றனர்.

அதன்படி நேற்று கண்ணகி வீடுபேறு அடைந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கண்ணகி சிலைக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், திரவியப்பொடி, சந்தனம், பூக்கள் உள்ளிட்ட 51 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து அர்ச் சனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெண்கள் கண்ணகிக்கு மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். இதில் பத்தினிக்கோட்ட காப்பாளர் ராஜசேகரன், மாதவி மன்றத்தலைவர் புலவர் தியாகராஜன், பூம்புகார் கல்லூரி தமிழ் பேராசிரியர்கள் அனிதா, சந்தானலட்சுமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News