ஆன்மிகம்

பொன்னமராவதி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒற்றை தேரோட்ட விழா

Published On 2016-08-12 13:27 IST   |   Update On 2016-08-12 13:27:00 IST
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன் குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஒற்றைத் தேரோட்டம் நடந்தது.
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன் குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஒற்றைத் தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்ட சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.இதில் அம்மன்குறிச்சி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி உட்பட பல்வேறு ஊராட்சிப்பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். பொன்னமராவதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் கருப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News