ஆன்மிகம்
திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தினமும் ஹோமங்களும், தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோவிலை வந்தடைந்தது. தேர்பவனி வந்த வீதிகளில் பொதுமக்களும், பக்தர்களும் தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தேரோட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, மாங்கோட்டை, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, மாங்கோட்டை, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.