ஆன்மிகம்

குழந்தை பேறு அருளும் மந்திரம்

Published On 2019-03-20 06:52 GMT   |   Update On 2019-03-20 06:52 GMT
குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.
திருக்கருகாவூர் ஸ்லோகம்

ஹமவத் யுத்தரரே பார்ச்வே
ஸுரதா நாம யக்ஷிணி
தஸ்ய ஸ்மரண மாத்ரேண
விசல்யா கர்பிணிய பேது

குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் இருவரும் கர்பரக்ஷம்பிகை அம்மனை மனதில் நினைத்தவாறு துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் தம்பதிகள் இருவருமோ அல்லது பெண்கள் மட்டுமோ அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.

பிரசவ காலத்தில் பெண்களுக்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏதும் ஏற்படாமல் காக்கும். கரு கலைவது, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படாமல் தடுத்து சுக பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும்.
Tags:    

Similar News