ஆன்மிகம்

கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்

Published On 2018-10-27 06:39 GMT   |   Update On 2018-10-27 06:39 GMT
ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படித்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.
தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை விடுக்கும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கிறேன்.

மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைக் தருபவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு பிரார்த்தனை செய்கிறேன்.

நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைச் தரித்துக் கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதைகளில் இருந்து காத்தருள பிரார்த்திக்கிறேன்.

நினைத்த மாத்திரத்திலேயே பாவங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும். அப்பேற்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! கடன் தொல்லைகளில் இருந்து நான் விடுதலை பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சை கிழித்தவரே! மகாவீரரான நரசிம்கரே! என் கடன்களில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்தில் இருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்கரே! கடன் உபாதையில் இருந்து நிவாரணம் பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

வேதம், உபிநிஷத் யக்ஞம் இவைகளின் ஈச்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பதற்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும். அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.
Tags:    

Similar News