ஆன்மிகம்
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம்

செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய முடியவில்லையா? அப்ப இதை செய்யுங்க...

Published On 2021-10-15 03:18 GMT   |   Update On 2021-10-15 09:06 GMT
செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்றவுடன் யாரும் அலறித் துடிக்க வேண்டியது இல்லை. முறையான வழிபாடுகள், பிரார்த்தனைகள் மூலம் திருமண பந்தத்தை கோணலாகிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு மண வாழ்க்கை தள்ளிப் போகும். இதனால் அவர்கள் படும் அவஸ்தைகள் அதிகம். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது.

செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வருகின்றதோ அதை தேர்ந்தெடுத்து செய்யவும், வழக்கத்திற்கும் கொண்டு வரவும்.

எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்க்கிழமை இந்நாட்களில் பக்கத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்.

இதுவும் முடியவில்லை என்றால் செவ்வாய் அன்று காயத்ரி மந்திரத்தை நன்றாக படித்து மனதில் சொல்லிக் கொண்டு தியானத்தில் ஈடுபடவும். இவ்வாறு செய்து வர செவ்வாய் நிச்சயம் கருணை காட்டுவார்.
Tags:    

Similar News