ஆன்மிகம்
தேவிபட்டினம்

நவகிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தேவிபட்டினம்

Published On 2021-10-07 07:10 GMT   |   Update On 2021-10-07 08:28 GMT
கடலுக்குள் இருக்கும் நவக்கிரக மண்டபம் தான் தேவிபட்டினம். நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம்.
ராவணனால் சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவளை மீட்க வந்த ராமபிரான் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார்.

அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும்.

ராமமேஸ்வரம் அல்லது ராமநாதபுரத்திலிருந்து இறங்கி இவ்ஊருக்கு செல்லலாம். ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாத புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
Tags:    

Similar News