ஆன்மிகம்
ராசிப்படி செய்ய வேண்டிய பரிகாரங்கள்

மகாளய அமாவாசை: ராசிப்படி செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Published On 2021-10-06 06:23 GMT   |   Update On 2021-10-06 06:23 GMT
இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும்.
முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் ஒவ்வொரு வரும் தங்கள் ராசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எளிய தான தர்மங்களைச் செய்து பித்ருக்களின் நல்லாசியைப் பெறுவது முக்கிய கடமையாகும்.

மேஷம்:- தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி வரும்.

ரிஷபம்:- முதியவர்களைப் பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு, உடை தானம் தர பெரியோர்களின் நல்லாசி கிடைக்கும்.

மிதுனம் :- நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வார்கள்.

கடகம்:- விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் உங்களின் பாவம் நீங்கி அதிர்ஷ்டம் வந்து சேரும்.

சிம்மம்:- அசைவ உணவை தவிர்த்து சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை, ஆடை தானம் தந்து ஆசி பெற்றால் பித்ருக்களின் நல்லாசி கிடைக்கும்.

கன்னி:-கஷ்டங்களில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது முன்னோர்களின் நல்லருளை பெற்றுத்தரும்.

துலாம் :- துப்புரவு தொழிலாளர்களுக்கு முழுச் சாப்பாடு தண்ணீருடன் தானம் தந்தால் மன நிம்மதி நிலைக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும்.

விருச்சிகம்:- சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, நாட்டுச் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுகளில் தூவ, வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதிகரிக்கும்.

தனுசு:- குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு புத்தாடையுடன் இட்லி,எள்ளு சட்னியுடன் தண்ணீரும் தானம் தந்தால் முன்னோர்களின் நல் ஆசி கிட்டும்.

மகரம்:- சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணை வாங்கி தந்து பராமரிப்பு இல்லாத கோவில் களுக்கு பராமரிப்பு பணிக்கு உதவினால் கர்ம வினை நீங்கும்

கும்பம்:- சாலை ஒரங்களில் ஆதரவின்றி அல்லல் படுபவர்களுக்கு பெட்சீட், காலணி கொடுத்து உதவினால் முன்னோர்கள் ஆசி தேடி வரும்.

மீனம்:-அந்தணர்களுக்கு வஸ்திரத்துடன் பச்சை காய்கறிகள், அரிசி, பருப்பு தானம் தர வினைப்பயன் தீரும்.

இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும். நன்மை தரக்கூடிய தான, தர்மம், பித்ரு காரியங்களை யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர்கள் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். ஏன் மனித ரூபத்தில் நமக்குப் பக்கத்திலேயே கூட இருக்கலாம்.

அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ, உயர்ந்ததாகவோ இருக்கலாம். நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் வழிபாடு அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும். மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இந்த உலகத் துன்பம் தீர உதவும். அன்று ஒட்டு மொத்த முன்னோர்களையும் நினைவு கூர வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு வழிபாட்டை செய்வது நல்லது.

Tags:    

Similar News