கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக் கோப்பை- இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

Published On 2023-02-12 12:59 GMT   |   Update On 2023-02-12 12:59 GMT
  • லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
  • இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து விலகல்.

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பயிற்சி ஆட்டத்தின்போது இடது கைவிரவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று பொறுப்பு பயிற்சியாளர் கனித்கர் நேற்று தெரிவித்தார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

Similar News