கிரிக்கெட்

கடந்த 12 ஆண்டுகளாக கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்- பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழாரம்

Published On 2023-02-03 10:15 GMT   |   Update On 2023-02-03 10:15 GMT
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.

விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். பாபர் அசாமும் இந்த லிஸ்ட்டில் உள்ளார். இவர்கள் தவிர ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர் ஆகிய அதிரடி வீரர்களும் தலைசிறந்த வீரர்களே. ஆனால் அந்த டாப் 4-ல் இவர்கள் பெயர் இல்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்கள், டெஸ்ட்டில் 27 சதங்கள் மற்றும் டி20-யில் ஒரு சதம் என மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 4 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக உள்ளது.

இந்திய அணியில் விராட் கோலிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோகித் சர்மா. சொல்லப்போனால் அவரைவிட மாபெரும் இன்னிங்ஸ்களை ஆடி அசத்தியவர் ரோகித். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.

இருவருமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல. ஆனால் விராட் கோலி தான் தலைசிறந்த வீரர் என்று கொண்டாடப்படும் நிலையில், விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொஹைல் கான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-


விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ரோகித் சர்மா அவரை விட சிறந்த பேட்ஸ்மேன். டெக்னிக்கின் அடிப்படையில் கோலியை விட ரோகித்தே சிறந்த வீரர். ரோகித் பந்தை வரவிட்டு தாமதமாக ஆடுவதால் அவருக்கு ஷாட் ஆட கூடுதல் நேரம் கிடைக்கிறது. கடந்த 10-12 ஆண்டுகளாக ரோகித் சர்மா தான் சர்வதேச கிரிக்கெட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

இவ்வாறு சொஹைல் கான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News