கிரிக்கெட் (Cricket)

லக்னோ அபார பந்துவீச்சு - குஜராத்தை 135 ரன்களில் கட்டுப்படுத்தியது

Published On 2023-04-22 17:20 IST   |   Update On 2023-04-22 17:20:00 IST
  • முதலில் ஆடிய குஜராத் 135 ரன்கள் எடுத்தது.
  • அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 66 ரன்கள் எடுத்தார்.

லக்னோ:

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

லக்னோவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விரித்திமான் சகா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 50 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News