இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி- தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்
- இன்றைய போட்டியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்பு
இந்தூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.