கிரிக்கெட்

கோப்பையை கைப்பற்றிய ஜாஃப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் - கோப்பையை கைப்பற்றியது ஜாஃப்னா கிங்ஸ்

Published On 2022-12-24 01:02 GMT   |   Update On 2022-12-24 01:02 GMT
  • முதலில் ஆடிய கொழும்பு அணி 163 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய ஜாஃப்னா அணி 164 ரன்கள் எடுத்து வென்றது.

கொழும்பு:

லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. சண்டிமால் 49 ரன் எடுத்தார். போபரா 47 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாஃப்னா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். சதீரா சமரவிக்ரமா 44 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஜாஃப்னா அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சதீரா சமரவிக்ரமாவுக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News