கிரிக்கெட்

விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் அடிக்க காரணம் இதுதான்... வெங்கடேஷ் அய்யர்

Published On 2024-03-30 09:38 GMT   |   Update On 2024-03-30 09:38 GMT
  • சுனில் நரைன் 22 பந்தில் 47 ரன்கள் விளாசினார்.
  • வெங்கடேஷ் அய்யர் 30 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 பந்துகள் மீதம் வைத்து சேஸிங் செய்தது.

சுனில் நரைன் 22 பந்தில் 47 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 30 பந்தில் அரைசதமும் அடித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களால் அதிரடியாக விளையாடும்போது, விராட் கோலியால் ஏன் ஆடமுடியவில்லை. அவர் 59 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் அடித்துள்ளார் என விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் 30 பந்தில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யர் கூறியதாவது:-

முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளத்தில் இரட்டிப்பு வேகம், டபுள் பவுன்ஸ் இருந்தது. இதனால் முதல் இன்னிங்சில் பவுண்டரி அடிப்பது கடினமாக இருந்திருக்கும். ஆடுகளம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது.

எனக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஸ்கேன் பரிசோதனைக்குப் பின் தெரியவரும். 2-வது இன்னிங்ஸ் போது பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வந்தது. சுனில் நரைனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர் விரைவாக ரன்கள் சேர்த்து எங்கள் மீதான நெருக்கடியை குறைத்தார். அதன்பின் வழக்கமான முறையில் நாங்கள் போட்டியை முடித்தோம்.

விஜயகுமார் வைசாக் பந்தை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வேகமாக வீசினால், அவைகள் எளிதான சிக்கசருக்கு பறந்து விடும். நாங்கள் பந்து வீசும்போது கூட இது நிகழ்ந்தது" என்றார்.

பிலிப் சால்ட் 20 பந்தில் 30 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.3 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 24 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags:    

Similar News