கிரிக்கெட்
null

ஐ.பி.எல். 2024: கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்குக்கு பேட் பரிசளித்த கிங் கோலி

Published On 2024-03-30 08:55 GMT   |   Update On 2024-03-30 10:05 GMT
  • நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
  • பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் அடித்தார்.

இதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது.

இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு, கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங்குக்கு விராட் கோலி பேட் பரிசளித்தார். 

Tags:    

Similar News