கிரிக்கெட்

4-வது வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்- சி.எஸ்.கே. பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

Published On 2024-04-28 05:00 GMT   |   Update On 2024-04-28 05:00 GMT
  • ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது.
  • ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.

சென்னை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டித் தொடரின் 46-வது 'லீக்' ஆட்டமாகும். சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது போட்டியாகும்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 84 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் தோற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது அவசியமாகும்.

ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.


இன்றைய போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியதாவது:-

சேப்பாக்கம் மைதானத் தில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்சின் சாதனை நன்றாகவே இருந்தது. ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கிறது. கடந்த சில ஆட்டத்தில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக கருதுகிறேன். பனியின் தாக்கம் சி.எஸ்.கே. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் வீச இயலவில்லை.

ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் ஆடி வருகிறார். தற்போது 4-வது வீரராக ஆடி வருகிறார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு களம் இறக்கப்படும் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல் படுகிறார்.

ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News