கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் ஜூலை 19ம் தேதி மோதல்

Published On 2024-06-25 19:54 IST   |   Update On 2024-06-25 19:54:00 IST
  • மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
  • குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.

புதுடெல்லி:

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

ஜூலை மாதம் 19-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை இலங்கையின் தம்புல்லாவில் நடைபெறுகிறது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யுஏஇ அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 26-ம் தேதி நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மகளிர் ஆசிய கோப்பைக்கான முதல் போட்டியில் இந்திய அணி ஜூலை 19-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

Tags:    

Similar News