கிரிக்கெட்

ரிங்கு சிங்- சாம்சன் அதிரடி: அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2023-08-20 16:33 GMT   |   Update On 2023-08-20 16:33 GMT
  • அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்கள் எடுத்து அசத்தினார்.
  • 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதைதொடர்ந்து, இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சாம்சன் 40 ரன்களும், ரங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களும், திலக் வர்மா ஒரு ரன்னும் எடுத்தனர்.

வாஷிங்டன் சுந்தர் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

இதைதொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

Similar News