கிரிக்கெட்

இடது பக்கம் நின்றால் ஐபிஎல் கோப்பை- 2019 முதல் அரங்கேறிய அதிசய நிகழ்வு

Published On 2024-05-27 07:30 GMT   |   Update On 2024-05-27 07:30 GMT
  • 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
  • இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் 2019-ம் ஆண்டு சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா இடது புறமும் டோனி வலது புறமும் இருந்தார். இறுதியில் ரோகித் கோப்பையை தட்டி சென்றார்.

அதேபோல 2020-ம் ஆண்டு மும்பை - டெல்லி மோதின. இதிலும் ரோகித் இடது புறம் நின்றார் கோப்பையை வென்றார். 2021-ல் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் இடது புறம் டோனி நின்றார் கோப்பையை வென்றார்.

இப்படி 2024 வரை இடது புறம் நின்ற அணியே கோப்பை வென்ற அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் 2019 முதல் குவாலிபையர் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News