கிரிக்கெட்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- இலங்கை ஆட்டம் மழையால் தாமதம்

Published On 2023-09-17 10:11 GMT   |   Update On 2023-09-17 10:20 GMT
  • ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
  • இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா?

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.

ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

கள ஆய்வுக்கு பிறகு இன்னும் சில நிமிடங்களில் போட்டி ஆரம்பித்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் இடையே, மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் ரிசர்வ் டேவான நாளை போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News